தீபாவளி தினத்தன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சோகம்!!

791

தீபாவளி தினமான நேற்று யாழில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு விபத்துக்களில், நால்வர் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

யாழ் – கண்டி நெடுஞ்சாலை ஏ9 வீதியில் நேற்று இரவு 7 மணியளவில் எரிபொருள் தாங்கிய வாகனமும், மோட்டார் சைக்கிளிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை யாழ் – குப்பிளான் பகுதியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் பயணிந்த செ.நிரோசன் (வயது 20) எனும் இளைஞன் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த தூணுடன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

மேலும், நல்லூர் – சங்கிலியன் வீதியில் லான்ட் மாஸ்டரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் கோப்பாய் வடக்கை சேர்ந்த சி. தர்மசீலன் எனும் இளைஞனும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.