வவுனியாவில் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப கோரி நபர் ஒருவர் நூதன போராட்டம்!!

593

வடக்கில் இன நல்லிணக்கம் சீர்குலைந்திருப்பதாகவும் அதனை மீள் கட்டியெழுப்ப வேண்டும் என வலியுறுத்தி பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் இன்று (10.11) வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், நாட்டின் தெற்கு பகுதியில் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக உள்ளார்கள். ஆனால் வடக்கில் அந்த நிலைமை இல்லை. எனவே இங்குள்ள மக்களும் தெற்கினைப் போன்று சமாதானமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்கள் சிங்கள மக்களை சந்தேகமாக பார்க்கக் கூடாது. அவ்வாறு இருந்தால்தான் இந்த நாட்டினை கட்டியெழுப்ப முடியும். வடக்கில் 10 வீதமானவர்கள் தீவிர மனப்பான்மையுடன் இருக்கிறார்கள். அந்த நிலைமை இல்லாது ஆக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த டீமன் ஆனந்த என்பவர் இன்று காலையில் கிளிநோச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.