நாடாளுமன்ற வளாகத்திற்கு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு நேற்று கொழும்பு உயர் நீதிமன்றத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்றம் கூட்டப்படும் என அறிவித்தல் வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்திலேயே இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.
இந்த சந்தர்ப்பத்திலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றுக்கு வருகை தந்துள்ளதுடன், ஜனாதிபதி இதுவரை வரவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்துள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.







