நாடாளுமன்றில் மஹிந்தவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி : ஜே.வி.பி எடுத்துள்ள முடிவு!!

1262

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது பிரதமர் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட உள்ளது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தற்போது சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று காலை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று மாலை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும். பிரதமர், சபை முதல்வர் மற்றும் ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஆகியோர் தவிர்ந்த எந்த உறுப்பினரும் நாடாளுமன்ற அவையில் எந்த ஆசனத்திலும் அமரலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் தற்போது விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.