போர்க்களமாக மாறிய நாடாளுமன்றம் : சபாநாயகரின் ஆசனத்திற்கு அருகில் சென்று சண்டையிடும் உறுப்பினர்கள்!!

483

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் மஹிந்த அணியின் உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசனத்திற்கு அருகில் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மீண்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டாம் என்று கூறி இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்புக்கள் இடையிடையே தடைப்படுகின்றன.

இதில் மஹிந்தவை சுற்றியும் உறுப்பினர்கள் திரண்டுள்ளனர். அனைவருமே எழுந்து நின்று போராட்டம் நடத்துவதால் நாடாளுமன்றம் பெரும் போர்க்களமாக மாறியுள்ளது.

மஹிந்த அணி உறுப்பினர்களுக்கும், ரணில் கட்சியினருக்கும் பெரும் சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும் சபாநாயகரின் இடத்தை முற்றுகையிட்டு குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.