200 வருடம் பழமை வாய்ந்த மரத்திற்கு ஏற்பட்ட நிலை : அசௌகரியத்தில் மக்கள்!!

535

200 வருடம் பழமை வாய்ந்த மரம்

ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் இருந்த 200 வருடம் பழமையான பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் அவ் வீதியூடான போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு, மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை மல்லியப்பு பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். மேலும் மரத்திற்கு கீழே இருந்த ஆலயம் ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கனரக வாகனங்கள் குறித்த வீதியினூடாக செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனினும், இந்த மரத்தினை வெட்டி அகற்றும் பணியில் பொது மக்களும், தலவாக்கலை மற்றும் லிந்துலை பொலிஸாரும் செயற்பட்டு வருகின்றனர்.

அத்தோடு, மின்சார இணைப்புகளை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளில் லிந்துலை மின்சார சபையினர் ஈடுப்பட்டுள்ளனர்.