வவுனியா கனகராயன்குளத்தில் மரம்நடுகை வாரத்தினை முன்னிட்டு மரம்நடுகை!!

653

மரம்நடுகை மாதத்தினை முன்னிட்டு வவுனியா வடக்கின் கனகராயன்குளம் மையப்பகுதியினை அண்டிய ஏ9 வீதியின் ஒரு பக்கமாக மூன்று கிலோமீற்றர் தூரத்திற்கு மாகோகனி மரக்கன்றுகளை நாட்டும் செயற்றிட்டம் நேற்று (22.11.2018) காலை 10 மணியளவில் கனகராயன்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் சிறப்பான முறையில் ஆரம்பமானது.

இந் நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேசசபை தலைவர் ச.தணிகாசலம், சபை செயலாளர் க. சத்தியசீலன், பிரதேசசபை உறுப்பினர்கள் ஜெக்கொடி ஜெயரூபன், நடராஐா விநாயகமூர்த்தி மற்றும் கனகராயன்குளம் முச்சக்கரவண்டிச்சங்கம், கமக்காரஅமைப்பு, வர்த்தக சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம் போன்றவற்றின் பிரதிநிதிகள், சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு வீதியோரங்களில் மரங்களை நாட்டினர்.