மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்த எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என உணரும் வகையில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெலவின் கையொப்பத்துடன் இன்று மதியம் வெளியிடப்பட்ட ஊடக அறிவிப்பில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கோப்பாயில் உள்ள படை முகாமிற்கு முன்னால் எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினம் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்கள், கொடிகள் பயன்படுத்தி அந் நினைவு தினத்தை அனுஸ்டிக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் தடை விதித்து நேற்று கட்டளை பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், அரசாங்க தகவல் திணைக்களம் இவ்வாறானதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.





