முகமாலையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி!!

476

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதி நபர் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி – முகமாலையில், இன்று முற்பகல் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரின் சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது