வசமாக சிக்கிய நபர்
மட்டக்களப்பு – ஏறாவூரில் மிக சாதுரியமாக திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் சிசிரிவி காணொளியின் உதவியுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்களிடம் இருந்து கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவம் இடம்பெற்ற இடங்களை அண்டியுள்ள சிசிரிவி காணொளி பரிசோதிக்கப்பட்ட போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அவ்வப்போது மோட்டார் சைக்கிளிலும் பயணம் செய்து பணப்பறிப்பில் ஈடுபட்டு தலைமறைவாகி வந்திருப்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேக நபர் திருட்டில் ஈடுபட முன்னர் தன்னை பொது சுகாதார பரிசோதகர் என்றும், பிரதேச அரசியல்வாதிகளின் இணைப்பாளர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டு கைவரிசையைக் காட்டியுள்ளதாக தெரியவருகிறது. சந்தேக நபரால் ஏமாற்றப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட பலர் பொலிஸ் நிலையம் சென்று குறித்த நபரின் அடையாளங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.







