ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்தக்கோரி வவுனியா பழைய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்னால் இன்று (26.11) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தினர்.
முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் எஸ்.செனவிரத்தின தலைமையில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் கலந்துகொண்டிருந்தார்.
மக்களின் உரிமையை மக்களிடம் விட்டுவிடுங்கள் வாக்களிக்க இடமளியுங்கள், ஐக்கிய தேசிய கட்சியினரே இதுவரை ஏமாற்றியது போதும் இனியும் வேண்டாம், இலங்கை இறையாண்மைக்கு எதிராக செயல்படும் சபாநாயகரை பதவி விலகச் சொல் போன்ற பாதாதையை தாங்கியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


















