வவுனியா நீதிமன்றம் முன்னாள் போராளி துளசிக்கு பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

1164

முன்னாள் போராளி துளசி

ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசிக்கு நேற்றையதினம் வவுனியா நீதிமன்றத்தினால் பல்வேறு நிபந்தனைகள் அடங்கிய கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் அம்மை வைத்தான், சாஸ்திரி கூளாங்குளத்தில் உள்ள 611ம் இரானுவ தலமையகத்திற்கு முன்பாக அல்லது பக்கத்திலோ தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் இறந்து போன உறுப்பினர்களின் மாவீரர் நிகழ்வினை நடாத்துவதற்கு நீங்கள் ஏற்பாடு செய்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியினால் தெரியவந்துள்ளது.

எனவே 1979ம் இலக்க 15ம் குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை 106 (1) பிரிவின் பிரகாரம் எனக்கு இருக்கின்ற அதிகாரங்களின் படி கீழ் குறிப்பிடுகின்ற கட்டளைகளை பிறப்பிக்கின்றேன் என வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1. ஈச்சங்குளம் 611ம் இரானுவ முகாம் அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீற்றர் பகுதிக்கு உட்பிரவேசிக்க கூடாது

2. குறித்த இரானுவ முகாமிற்கு அருகே வீதிகளை மறித்து இடையூறு விளைவிக்காமலும் அரச சொத்துக்களுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படுத்த கூடாது.

3. தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகள் பாதாதைகள், படங்கள், உடைகள் பாவணை தடை மற்றும் பாடல்கள் இசைக்க கூடாது எனவும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.