மட்டக்களப்பு, வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் மிகவும் உணர்வு பூர்வமாக, பெருமளவான மக்களின் கண்ணீரின் மத்தியில் இடம்பெற்றது.
கார்த்திகை 27ஆம் நாளான இன்று தமிழர் தாயகப் பிரதேசங்களில் மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
அந்த வகையில், மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒன்று கூடிய பெருமளவான மக்கள் உயிர் நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.













