தற்காலிக அரசாங்கமோ தக்காளி அரசாங்கமோ இல்லை : ரணில்!!

504

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை தற்காலிக அரசாங்கமாக குறிப்பிட்டாலும் ஆட்சியில் இருப்பது தற்காலிக அரசாங்கமோ தக்காளி அரசாங்கமோ இல்லை எனவும், வன்முறை கும்பல் பலவந்தமாக அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

“வன்முறை கும்பல் பலவந்தமாக ஆட்சியில் இருப்பது மக்களின் வாக்குரிமைக்கு எதிரானது என்பதால், அதற்கு இடமளிக்க முடியாது.

இங்கு இருப்பது நாட்டின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினை. நாட்டில் நாகரீகமான அரசியல், ஒழுக்கமாக வாழக்கூடிய அரசியல் முறைமையை உருவாக்க அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைக்கின்றேன்.

விரிவான கூட்டணி ஒன்றை உருவாக்க போவதாகவும் இந்த போராட்டத்தை மக்கள் சக்தி நடவடிக்கையாக மாற்றி வெற்றியுடன் போராட்டத்தை நிறைவு செய்ய உள்ளதாகவும்” ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.