நித்திரையில் தந்தையை கொலை செய்த மகன்!!

546

பொல்லால் தாக்கி தந்தையை கொலை செய்த மகனை நோட்டன்பிரிஜ் பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். 73 வயதான தந்தையே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் அதிகாலையில் உறங்கிக் கொண்டிருந்தபோது சந்தேக நபர் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சந்தேக நபர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மகன் என்னை தொடர்ந்து தொந்தரவு செய்கிறான் என நேற்று நோர்டன்பிரிஜ் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த நபர் முறைப்பாடு செய்ததாக தெரியவந்துள்ளது.

தனக்கு எதிராக முறைப்பாடு செய்ததால் கோபமடைந்த மகன் இந்த கொலையைச் செய்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட நேரத்தில் தந்தை மற்றும் மகன் மட்டுமே குறித்த வீட்டில் இருந்துள்ளதாகவும், உயிரிழந்தவரின் மனைவி நேற்று இரவு உறவினரின் வீட்டில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் டிக்கோயோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.