ஓமந்தை விளாத்திக்குளம் பகுதியில் இன்று அதிகாலை பிறந்த குழந்தை புதைக்கபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
கர்பிணியான தாய் குழந்தையை வீட்டிலேயே பிரசவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது குழந்தை உயிரிழந்த நிலையில் பிறந்தமையால் அதனை நிலத்தில் புதைத்திருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியபடுத்தபட்டதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் நிலத்தில் புதைக்கபட்டிருந்த குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர்.
மேலும் குழந்தையின் தந்தையை கைது செய்துள்ளதுடன் தாய் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





