வவுனியாவில் கலாசார விழாவும், கலைஞர் கௌரவிப்பும்!!

608

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய கலாசார விழா 2018ம், கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் பிரதேச செயலாளர் க.உதயராசா தலைமையில் இன்று (01.12) வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க.பாடசாலையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். ஹனீபா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வு நடைபெறும் மண்டபத்திற்கு அதிதிகளும், கலைஞர்களும் மாலை அணிவித்து பவனியாக அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.

கலாசார விழாவில் தமிழ் மொழி வாழ்த்து, மங்கள இசை, வரவேற்பு நடனம், நாட்டார் இசை, சிவதாண்டவம், கிறிஸ்தவ நாடகம், பறை இசை, கிராமிய நடனம், போன்றவற்றில் பங்குபற்றிய கலைஞர்களுக்கு அதிதிகளால் பொன்னாடை போர்த்தி, சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்ட்டிருந்தனர்.

நிகழ்வில் வவுனியா பிரதேச செயலகத்தினால் ‘வவுனியம்’ எனும் நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. நூலை வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் வழங்க பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பெற்றுக்கொண்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து சிரேஸ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் நூலை பெற்றுக்கொண்டதுடன் அதிதிகளுக்கும் வவுனியம் நூல் வழங்கி வைக்கப்பட்டது.

சிற்பத்துறை, நாடகத்துறை, கலைத்துறை, இசைத்துறை, இலக்கியத்துறை போன்றவற்றிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு ‘கலா நேத்திரா’ என்ற விருது அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.