வவுனியாவில் ஆறுமுகநாவலரின் 196வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!!

416

ஆறுமுகநாவலரின் 196 வது நினைவு தினம் வவுனியா பிரதான சந்தைக்கு அருகிலிருக்கும் ஆறுமுகநாவலரின் நினைவுத் தூபியில் இன்று (05.12.2016) காலை 8.30 மணிக்கு வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் நகரசபை தலைவர் இ.கௌதமன், நகரசபை உறுப்பினர்கள், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், செயலாளர் மாணிக்கம் ஜெகன், வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் லம்போதரன், தமிழ்த் தாய் இளைஞர் கழகத்தின் தலைவர் வ.பிரதீபன், முச்சக்கரவண்டி சங்கத் தலைவர் ரவி, தமிழருவி சிவகுமார் மற்றும் வர்த்தகர்கள், சமூகசேவையாளர்கள், பொதுமக்கள் , நகரசபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நினைவுத் தூபிக்கான மலர்மாலை அணியப்பட்டதுடன் திருவருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் இவ்வுருவச் சிலை 1997.04.04 அன்று நகரசபை தலைவராக இருந்த ஜீ.ரி.லிங்கநாதனால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.