வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வு!!

278

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது.

எதிர்வரும் 12ம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது, ஐக்கிய தேசிய கட்சி இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றவுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக கூறிவரும் நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இவ்வாறான நம்பிக்கைத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதில்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அது இலங்கை வரலாற்றில் இடம்பெறும் முதல் நிகழ்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.