
குறித்த சம்பவம் கடந்த 4 ம் திகதி மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 75 வயதான பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கிசென்ற டிப்பர் வாகனம் செட்டிகுளம் தபால் நிலையத்திற்கு அருகாமையில் சென்றுகொண்டிருந்தபோது அவ்வீதி வழியே மாடுகளை மேய்த்துச் சென்ற வயோதிப் பெண்ணை மோதியதிலேயே விபத்து இடம்பெற்றதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டுசெட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். காலில் பலத்தகாயம் ஏற்பட்டமையால் அவருடைய ஒரு கால் அகற்றப்பட்டுள்ளது.
டிப்பர் சாரதி செட்டிகுளம் பொலிசாரால் கைதுசெய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.




