சந்திரிக்கா மீது கடும் அச்சத்தில் மைத்திரி!!

651

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மீது சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் அச்சத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட பிரதிநிதிகள் மாநாட்டிற்கு சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய சந்திரிக்கா அழைக்கப்படவில்லை என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிகாரம் சந்திரிக்காவிடம் உள்ளமையினால் கடும் அச்சத்தில் இருந்த ஜனாதிபதி அதற்கமைய இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் இது தொடர்பில் சந்திரிக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மனிடம் கடிதம் ஒன்றை அனுப்பி தகவல் வினவியுள்ளார்.

இந்த மாநாடு தொடர்பில் பெரியதாக தகவல் வெளியிட வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கம்பஹா மாவட்ட செயலாளர் லசந்த அலகியவண்ண ஆலோசனை வழங்கியதாக ரோஹன வக்ஷ்மன் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-