வவுனியா செட்டிக்குளம் அடப்பன்குளத்தில் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் ஒளிவிழாவும்!!

705

செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அடப்பன்குளம் மற்றும் துட்டுவாகை கிராம முன்பள்ளி இணைந்து நடாத்திய தரம் ஒன்றுக்கு செல்லும் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் ஒளிவிழா நிகழ்வும் நேற்றையதினம் (08.12.2018) காலை 9 மணியளவில் அடப்பன்குளம் தென்னிந்திய திருச்சைபை ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வில் இளம் சமூக சேவையாளன் சங்கரன் சசிகுமார், வவுனியா /முல்லைத்தீவு மாவட்ட தென்னிந்திய திருச்சபை பாதிரியார், அடப்பன்குளம் விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி, பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

விழாவிற்கான பரிசில் பொருட்களை ஸ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் பா.உதயராசா வழங்கினார்.