வவுனியாவில் வீட்டிற்குள் நுழைந்து ஒளிந்துகொண்ட முதலை!!

856

வவுனியா, ராசேந்திரகுளம் பகுதியில் வீட்டிற்குள் முதலை ஒன்று புகுந்துள்ள நிலையில் அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

ராசேந்திரகுளம் அருகிலுள்ள வீட்டு வளவு ஒன்றிற்குள் இன்று அதிகாலை 1 மணியளவில் ராசேந்திர குளப்பகுதியிலிருந்த முதலை ஒன்று உணவு தேடிச் சென்று ஒளிந்து கொண்டுள்ளது.

வீட்டு நாயின் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் வெளியே சென்று பார்வையிட்டபோது முதலை ஒளிந்து நின்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகாலை பொலிஸார் சென்று முதலையை மடக்கி பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதோடு, வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.