நீதிமன்றத் தீர்ப்பின்படி புதிய அரசாங்கம் : மைத்திரி முடிவு!!

465

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய அரசாங்கத்தை நியமிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அந்த தீர்ப்புக்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி வரும்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக தேர்தல் நடத்தப்படாது. மற்றுமொரு தீர்ப்பு நாளை நீதிமன்றம் வழங்க உள்ளது. இதன் பின்னர் தேவையான தீர்மானங்கள் எடுக்கப்படலாம் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.