மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய மைத்திரி!!

558

ஐக்கிய தேசியக் கட்சியுடன் நான் முன்னர் சேர்ந்தது என் முழு மனதின் சம்மதம் இன்றியே. அந்த தேர்தல் மேடைகளில் நின்ற போது நான் பட்ட வேதனைகளை என் உள்மனம் மட்டுமே அறியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரின் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒன்பது பேர் இருந்தால் தேசிய ஆட்சியமைக்கலாமென ரணில் ஓடித்திரிகிறார்.

அப்படியே எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் 9 எம்.பிக்கள் எங்கள் பக்கம் வந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றியும் நீங்கள் சிந்தியுங்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் நான் முன்னர் சேர்ந்தது என் முழு மனதின் சம்மதம் இன்றியே. அந்த தேர்தல் மேடைகளில் நின்ற போது நான் பட்ட வேதனைகளை என் உள்மனம் மட்டுமே அறியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக செயற்படுங்கள். அப்போதே நாம் எமது பயணத்தினை தொடரலாம் என அவர் ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியிடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.