கதிர்காமம், கிரிவெஹெர பகுதியில் கூர்மையான கத்தியுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கிரிவெஹெர விகரையின் விகாராதிபதி தம்மிக்க பௌத்த தேரர் இன்று அதிகாலை கிரிவெஹெரக்கு சென்று கொண்டிருந்த போது குறித்த நபரைக் கண்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது குறித்த நபர் சிறைச்சாலை உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பழங்கள் வெட்டுவதற்காக கத்தியை கொண்டு சென்றதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார். நிஷான் விக்ரமஹெட்டி ஆராச்சி என்ற 34 வயதான குறித்த நரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிவெஹெர விகாராதிபதி தம்மிக்க பௌத்த தேரை இலக்கு வைத்து இதற்கு முன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது. குறித்த சம்பவத்தில் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமை குறப்பிடத்தக்கது.






