நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரிய பயணம் செய்த வாகனம் காட்டுப் பன்றியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலே நேற்று இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரிய எந்தவித காயமும் இன்றி தப்பியுள்ளார். எனினும், குறித்த வாகனம் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




