இரணைமடு குளத்தினை பார்வையிட வரும் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

903

கிளிநொச்சி – இரணைமடு குளத்தில் நீர் வெளியேறும் சந்தர்ப்பத்தில் குளத்தினை பார்வையிட வரும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களம் இன்று அறிவுறுத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட உள்ளமையினால் அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றமையினால் நீர்வரத்து அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.