இரணைமடுகுள பகுதியில் தொடர்ந்தும் நீடிக்கும் ஆபத்து நிலை!!

506

இரணைமடுகுளத்தின் நீர்மட்டம் இன்று காலை 6 மணியளவில் 37 அடி 5 அங்குலத்தில் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இரணைமடுகுள பகுதியில் தொடர்ந்தும் ஆபத்தான நிலைமையே காணப்படுவதால் பார்வையாளர்களுக்கான அனுமதி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை 36 அடி நீர் கொள்ளளவு கொண்ட இரணைமடு குளமானது நேற்றையதினம் நாற்பது அடியாக உயர்ந்திருந்தது.

அத்துடன் குளத்தின் வான்கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.