கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து விபத்து : ஒரு உயிர் பலி : பலர் படுகாயம்!!

494

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்தொன்று நேற்று நள்ளிரவு புத்தளத்திற்கு அருகில் வைத்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து நேற்று இரவு 11 மணியளவில் மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இதன்போது வீதியில் நின்ற யானை ஒன்றுடன் அந்த அதிசொகுசு பேருந்து மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் யானை உயிரிழந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்த பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் பேருந்தும் பெருமளவு சேதமடைந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.