முல்லைத்தீவில் பத்து வயதுச் சிறுமி பலியாகிய சோகம் : இறுதி நிகழ்வுச் செலவுக்காக தள்ளாடும் குடும்பம்!!

762

 

வடமாகாணத்தில் பெய்து வரும் கனமழையினால் முல்லைதீவு முத்தையன் கட்டுக்குளம் அம்மன் கோவிலடி பகுதியில் கடந்த சனிக்கிழமை நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பத்து வயதுச் சிறுமி ஒருவர் நேற்றைய தினம் எதிர்பாராத விதமாக மரணமடைந்துள்ளார்.

பிள்ளையின் இறுதி நிகழ்வுகளை மேற்கொள்வதற்குக் கூட சிரமத்தினை எதிர்கொள்ளும் ஒரு நிலை இக்குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ளது.

எனவே இதனை கருத்தில் கொண்டு உதவிகளை பெற்றுக் கொள்ள கூடிய வழிகள் இருப்பின் உதவி செய்யுமாறு பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இடம் : ஜீவநகர், அம்மன் கோவிலடி, முத்தையன்கட்டுக்குளம்.
உதவுங்கள் உதவ முடியாவிட்டால் பகிருங்கள், யாரேனும் உதவக்கூடும்.