வவுனியாவிற்கான ஜனாதிபதியின் விஜயம் பிற்போடப்பட்டுள்ளது!!

1169

வவுனியா மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காணிப் பிணக்குகளுக்கு தீர்வுகாணும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவிருந்தது.

இந் நிலையில் அக் கலந்துரையாடல்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை பிரதேச செயலாளர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது வவுனியா அரசாங்க அதிபர் இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார்.

வவுனியாவிலுள்ள நான்கு பிரதேச செயலகங்களிலிருந்த காணிப் பிணக்குகள் நீண்டகாலமாக சீர்செய்யப்படவில்லை.

அத்துடன் வன இலகா திணைக்களத்தின் காணிகளில் மக்கள் குடியேற்றியுள்ளதை மீட்பது தொடர்பாகவும் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலைமைகளை சீர்செய்வதற்கு ஜனாதிபதி தலைமையில் காணிப் பிணக்குகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா மாவட்ட செலயகத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் ஒன்றின் அடிப்படையில் இக் கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக நேற்று மாலை வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச செயலாளர்களின் கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.