ஹொரணை – மொரகாஹென – கனன்வில பிரதேசத்தில் கால்வாய் ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள பெண் யார் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இதேவேளை, பம்பலபிட்டி – பொது குடியிருப்பு தொகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நபரொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த குடியிருப்பு தொகுதியில் துர்நாற்றம் வீசுவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொண்ட பரிசோதனையின் போதே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
65 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் சில தினங்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது





