கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய பாரிய விமானம்!!

521

உலகின் மிகப்பெரிய விமானமான A380 ரக விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.

குறித்த விமானத்தின் ஊழியர் ஒருவர் திடீர் சுகயீனமடைந்தமையினால் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

EK-408 ரக எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் டுபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் நோக்கி செல்லும் போது இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் இலங்கைக்கு மேல் பயணித்து கொண்டிருந்த போது 32 வயதான ஊழியர்கள் ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலை 10.25 மணியளவில் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் பிற்பகல் 12.15 மணியளவில் விமானம் மீண்டும் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 22ம் திகதி டுபாயில் இருந்து அவுஸ்திரேலிய நோக்கி பயணித்த விமானம் ஒன்றும் கட்டுநாயக்க விமானத்தில் தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.