ஒரு வயது குழந்தையின் உடலில் 100இற்கு மேற்பட்ட சூட்டுக்காயங்கள் : சந்தேக நபர் தப்பியோட்டம்!!

495

 

ஒரு வயதும் பத்து மாதங்களுமான குழந்தைக்கு இரண்டு மாதங்களாக சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட சம்பவமொன்று மொனராகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ- முத்துகண்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயின் சட்டவிரோத கணவனால் இந்த துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் குடித்துக்கொண்டிருக்கும்போது குழந்தையை சிகரெட்டால் சுட்டு காயப்படுத்தியுள்ளார்.

குழந்தையின் பின்புறம், கால்கள் மற்றும் இரகசியப் பகுதிகள், முகம் போன்ற இடங்களில் சிகரெட்டால் சுட்ட காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையின் உடலில் 100 க்கும் மேற்பட்ட சூட்டுக் காயங்கள் காணப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் அந்த இடத்தை விட்டு தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், குழந்தையின் தாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சியம்பலாண்டுவ ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.