கவிழ்ந்த நிலையில் கரை ஒதுங்கிய இந்திய படகு!!

903

 

இந்திய மீன்பிடிப்படகு ஒன்று முல்லைத்தீவு வலைஞர்மடம் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த படகு சேதமாகி கவிழ்ந்த நிலையில் ஆழ்கடலில் இருந்து கரைநோக்கி நேற்று பிற்பகல் கரைஒதுங்குவதை அந்தப்பகுதி மீனவர்கள் அவதானித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாருக்க தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வலைஞர்மடம் கடற்பகுதிக்கு சென்ற பொலிஸார் குறித்த படகு தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

மேலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் பொதுமக்களும் ஒன்றிணைந்து இந்தப் படகை கடலில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும் கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுவதினால் கடலில் உள்ள குறித்த படகை தரைக்கு கொண்டுவருவதற்கு சுமார் 3 மணித்தியாளங்கள் முயற்சித்திருந்தனர்.