அரசாங்க ஊழியர்களிற்கு 2019இல் ஓர் மகிழ்ச்சிகர செய்தி!!

839

 

மகிழ்ச்சிகர செய்தி

அரச பணியாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அது குறித்த நடவடிக்கைகளை தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக, பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொதவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த முறை முன்வைக்கப்படவுள்ள பாதீட்டின் மூலம் அரச பணியாளர்களுக்கு பலன்கள் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.