நவாஸ் ஷெரீப்புக்கு பதிலடி கொடுத்த மன்மோகன்சிங்!!

953

manஎன் வாழ்நாளில் இந்தியாவுடன் போரிட்டு பாகிஸ்தான் ஜெயிக்க வாய்ப்பு இல்லை என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் இந்த ஆண்டு பதவி ஏற்றபோது இந்தியாவுடன் நட்புறவை விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் நேற்றுமுன்தினம் அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசும்போது முற்றிலும் நேர்எதிராக பேசினார்.

காஷ்மீர் பிரச்சினை காரணமாக, இந்தியாவுடன் எந்த நேரத்திலும் போர் மூளும் என்று அவர் கூறினார். மேலும் தனது வாழ்நாளில் காஷ்மீர் விடுதலை ஆவதை காண ஆவலாக இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் பின்னர் இந்த தகவலை அவரது அலுவலகம் மறுத்தது.

இருப்பினும் நவாஸ் ஷெரீப்பின் அச்சுறுத்தலுக்கு பிரதமர் மன்மோகன்சிங் நேற்று பதிலளிக்கையில்..

என் வாழ்நாளில், இந்தியாவுடனான எந்த போரிலும் பாகிஸ்தான் வெற்றிபெற வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளாது என்று மத்திய அமைச்சரும், காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா உறுதிபட தெரிவித்தார்.

நவாஸ் ஷெரீப் கருத்து பற்றி நிருபர்கள் கேட்டதற்கு பரூக் அப்துல்லா கூறியதாவது..

பொதுமக்களை கவர்வதற்காக இதுபோன்ற கருத்துகள் பேசப்படுகின்றன. நவாஸ் ஷெரீப் அரசாங்கத்தை நடத்துகிறார். மக்களை தன்னுடன் வைத்துக்கொள்வதற்காக அவர் எதையாவது சொல்ல வேண்டி இருக்கிறது. அதை பார்த்து யாரும் பயப்படக்கூடாது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் இருப்பதாக நான் கருதவில்லை.

அதே சமயத்தில் காஷ்மீர் பிரச்சினைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை நடக்க வேண்டும். பிரச்சினை தீரும்வகையில், நாம் வேகமாக செயல்பட வேண்டும். அதன்மூலம், இரு நாடுகளிடையிலான நட்புறவு வலுப்படும் என்று தெரிவித்தார்.

நவாஸ் ஷெரீப்புக்கு பதிலடி கொடுத்த மன்மோகன்சிங்!!

என் வாழ்நாளில் இந்தியாவுடன் போரிட்டு பாகிஸ்தான் ஜெயிக்க வாய்ப்பு இல்லை என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் இந்த ஆண்டு பதவி ஏற்றபோது இந்தியாவுடன் நட்புறவை விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் நேற்றுமுன்தினம் அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசும்போது முற்றிலும் நேர்எதிராக பேசினார்.

காஷ்மீர் பிரச்சினை காரணமாக, இந்தியாவுடன் எந்த நேரத்திலும் போர் மூளும் என்று அவர் கூறினார். மேலும் தனது வாழ்நாளில் காஷ்மீர் விடுதலை ஆவதை காண ஆவலாக இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் பின்னர் இந்த தகவலை அவரது அலுவலகம் மறுத்தது.

இருப்பினும் நவாஸ் ஷெரீப்பின் அச்சுறுத்தலுக்கு பிரதமர் மன்மோகன்சிங் நேற்று பதிலளிக்கையில்..

என் வாழ்நாளில், இந்தியாவுடனான எந்த போரிலும் பாகிஸ்தான் வெற்றிபெற வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளாது என்று மத்திய அமைச்சரும், காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா உறுதிபட தெரிவித்தார்.

நவாஸ் ஷெரீப் கருத்து பற்றி நிருபர்கள் கேட்டதற்கு பரூக் அப்துல்லா கூறியதாவது..

பொதுமக்களை கவர்வதற்காக இதுபோன்ற கருத்துகள் பேசப்படுகின்றன. நவாஸ் ஷெரீப் அரசாங்கத்தை நடத்துகிறார். மக்களை தன்னுடன் வைத்துக்கொள்வதற்காக அவர் எதையாவது சொல்ல வேண்டி இருக்கிறது. அதை பார்த்து யாரும் பயப்படக்கூடாது. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் இருப்பதாக நான் கருதவில்லை.

அதே சமயத்தில் காஷ்மீர் பிரச்சினைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை நடக்க வேண்டும். பிரச்சினை தீரும்வகையில், நாம் வேகமாக செயல்பட வேண்டும். அதன்மூலம், இரு நாடுகளிடையிலான நட்புறவு வலுப்படும் என்று தெரிவித்தார்.