அந்தமானில் பதிவானது இவ்வாண்டுக்கான முதலாவது பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கையா?

623

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் இன்று காலை பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

6.0 ரிக்டர் அளவில் பதிவாகிய இந்த நிலநடுக்கமானது சுமார் 15 நிமிடங்கள் வரையில் நீடித்திருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை என தெரியவருகிறது.

நிலநடுக்கமானது பல கிலோமீற்றர் வரையில் உணரப்பட்டுள்ளதாகவும், கடல் பகுதியிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தமானில் இந்த வருடத்தில் ஏற்படும் முதல் நிலநடுக்கம் இதுவென குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.