இந்த ஆண்டு 2 சந்திர கிரகணங்கள், 3 சூரிய கிரகணங்கள் தென்படும் : யாழ். மற்றும் திருகோணமலை மக்களுக்கு அரிய வாய்ப்பு!!

391

இந்த ஆண்டு இரண்டு சந்திர கிரகணங்களும், மூன்று சூரிய கிரகணங்களும் உலக மக்களுக்கு தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மே மாதம் 21 மற்றும் ஜூலை மாதம் 16 ஆம் திகதிகளில் சந்திர கிரகணம் தென்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் முதலாவது சூரிய கிரகணம் கடந்த 6ஆம் திகதி தென்பட்டுள்ளதுடன், ஜூலை மாதம் 02 ஆம் திகதி மற்றும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதிகளிலும் சூரிய கிரகணங்கள் தென்படும்.

ஜூலை மாதம் 16ஆம் திகதி ஏற்படும் சந்திர கிரகணத்தில் அரைவாசியையும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தோன்றும் சூரிய கிரகணத்தையும் இலங்கையர்களால் காணக்கூடியதாக இருக்கும்.

எவ்வாறாயினும், டிசம்பர் மாதம் உருவாகும் சூரிய கிரகணத்தை யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையான பகுதிகளில் வாழும் மக்களால் முற்றாக அவதானிக்க முடியும் என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.