மனித உரிமைகளை வலியுறுத்தி வவுனியாவில் பேரணி!!(படங்கள்)

632

மனித உரிமைகள் தினம் எதிர்வரும் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் இன்று வவுனியாவில் மனித உரிமைகளை வலியுறுத்தி பேரணி ஒன்று இடம்பெற்றது.

கூமாங்குளம் இளைஞர் கழகம் சம் வித்த யுத் இளைஞர் கழகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இவ் ஊர்வலம் வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்னாள் ஆரம்பித்து இளைஞர் சேவைகள் மன்றத்தை சென்றடைந்தது.

இளைஞர் கழகங்களை சேர்ந்த இளைஞர் யுவதிகள், பாடசாலை மாணவர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்த இவ் ஊர்வலத்தில் மனித உரிமையென்றால் என்ன வரையறை செய்யுங்கள் என்ற பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

1

2

3