கிளிநொச்சியில் பாடசாலை மாணவனை கடுமையாக தாக்கிய இனந்தெரியாத நபர்கள்!!

484

மாணவனை கடுமையாக தாக்கிய  நபர்கள்

கிளிநொச்சி – கோணவில் பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களிற்கு முன்னர் பாடசாலைகளில் போதைப்பொருள் பாவணை தொடர்பில் மாணவர்களை விழிப்பூட்டும் செயற்பாடு இடம்பெற்றது.

இதன் போது குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்த பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட சிறுவன் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் தகவல் தந்தால் பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்வதில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதியை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்ததாகவும், இவ்விடயம் தொடர்பில் பலரது கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ஊடகங்களிற்கு இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது மகன் மீது இனம் தெரியாதோரால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், குறித்த தாக்குதலில் தனது மகனிற்கு சிறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு குறித்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாதவிடத்து, எதிர்வரும் காலங்களில் எமது சமூகம் சீரழிந்து போகும் எனவும், போதைப்பொருள் தொடர்பில் எவரும் தகவல்களை வழங்க முன்வர மாட்டார்கள் எனவும் இதன் போது ஊடகங்களின் முன்னால் ஆதங்கத்தினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.