திருகோணமலையில் பதற்றத்திற்கு காரணமான சடலம் மீட்பு!!

433

கிண்ணியாவின் பதற்றமான சூழ் நிலைலையையடுத்து தேடப்பட்டு வந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா இடிமன் பகுதியைச் சேர்ந்த 23 வயதான முகம்மது ரபீக் பாரிஸ் ன்பவரின் சடலத்தினை நேற்று மாலை மீட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்ஃ.

குறித்த நபர் திருமணமானவர் என்பதோடு, மற்றொருவரான றம்ழான் பஷீர் முகம்மது றமீஸ் வயது 19 இளைஞரை தேடி வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

முன்னதான நேற்று காலை மணல் அகழப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய கடற்படையின் சுற்றிவளைப்பு குழுவொன்று அந்த இடத்திற்கு சென்றுள்ளது.

மணல் ஏற்றுவோரை கைது செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனால் கடற்படையினர் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடற்படையினர் முன்னெடுத்த நடவடிக்கையின் போது 7 பேர் கைது செய்யப்பட்டதுடன் அங்கிருந்த மூவர் கங்கையில் பாய்ந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்களில் ஒருவர் தப்பியுள்ளதுடன் 23 வயதான பதூர் ரபீக் பைரூஸ் மற்றும் 19 வயதான ஆர்.பசீர் ரமீஸ் ஆகியோர் காணாமற்போயிருந்தனர்.

காணாமற்போன இருவரையும் தேடும் நடவடிக்கைள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.