மட்டக்களப்பில் வீதி விபத்து : தமிழ் விரிவுரையாளர் பரிதாபமாக பலி!!

1381

விரிவுரையாளர் பரிதாபமாக பலி

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூரில் இடம்பெற்ற வீதி விபத்தில் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் இரசாயனவியல் விரிவுரையாளர் பலியாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தை வீதி, செங்கலடியை சேர்ந்த கந்தக்குட்டி கோமளேஸ்வரன் என்ற 48 வயதுடைய நபரே சம்பவத்தில் பலியாகியுள்ளார். இவர் இன்று காலை கடமைக்காக மட்டக்களப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வீதியால் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய பேருந்தை கைப்பற்றியதோடு, சாரதியையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.