வவுனியாவில் பெருமளவிலான பழைய மாணவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற மகாவித்தியன்கள் தினம்!(படங்கள்,வீடியோ)

1923

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கமானது அப்பாடசாலையில் கல்விகற்று வெளியேறிய அனைத்து பழைய மாணவர்களையும் மீண்டும் பாடசாலையில் அணிதிரட்டும் நோக்குடனான ஒன்றுகூடல் நிகழ்வொன்றினை ‘#மகாவித்தியன்கள்தினம்’ எனும் பெயரில் கடந்த 03.02.2019 பாடசாலையில் ஏற்பாடுசெய்திருந்தது.

இந் நிகழ்வானது காலை 8:00 மணிக்கு பாடசலையிலிருந்து நடைபவனியாக ஆரம்பித்து கண்டி வீதிவழியாக கடைவீதியை அடைந்து வைத்தியசாலை சுற்றுவட்டத்தின் ஊடாக மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.

அதன்பின்னர் பாடசாலை வளாகத்தில் பழைய மாணவர் அணிகளுக்கிடையேயான மென்பந்து கிரிக்கெட் போட்டிகள் உட்பட்ட சிநேகித பூர்வ விளையாட்டு போட்டி நிகழ்வுகளும், பிள்ளைகளுக்கான விநோத விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றது.

பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக அனைத்து பழையமாணவர்களையும் ஒன்றுசேர்ந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு உரமூட்டும் இந்த ஆரம்ப நிகழ்வில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பழையமாணவர்கள் கலந்துகொண்டனர்.

குறிப்பாக நடைபவனியுடன் இணைந்து வாகனபவனியாக சென்றமாணவர்கள் தமிழர் பண்பாட்டை நினைவுகோரும் விதமாக #மாட்டுவண்டில், #உழவியந்திரங்களை தோரணங்களால் அலங்கரித்து ஊர்வலமாக சென்றிருந்தனர்.

நடை பவனி படங்களை காண