புத்தளத்தினை உலுக்கிய சம்பவம் : தாய்க்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை!!

492

புத்தளத்தினை உலுக்கிய சம்பவம்

04 வயது மகளை கொலை செய்து கலா ஓயாவில் வீசியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபரான தாயார் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புத்தளம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சந்தேக நபரான தாயார் நீதவானை சந்தித்து இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் குறித்த சிறுமியின் சடலம் இதுவரையில் கிடைக்கபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.