இலங்கையில் மாற்றுத் திறனாளி பெண்களுக்கு நேர்ந்து வரும் அவலம்!!

555

மாற்றுத் திறனாளி பெண்

இலங்கையில் மாற்றுத் திறனுடைய பெண்களும், சிறுமிகளும் பல்வேறு மட்டங்களில் ஒதுக்கப்படல், பாரபட்சம், துஷ்பிரயோகம் முதலானவற்றை எதிர்கொள்கின்றனர் என ஐக்கிய நாடுகளின் மகளிர் தொடர்பான அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மகளிர் அமைப்பின் பால்நிலை, மாற்றுத்திறன் மற்றும் தொழில்வாய்ப்பினை இலக்குவைத்து நேற்று வெளியிடப்பட்ட இலங்கையின் முதலாவது அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின்படி, அனைத்து வயதுப் பிரிவுகளிலும் மாற்றுத்திறனுடைய ஆண்களைவிட, மாற்றுத்திறனுடைய பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

எனினும், இலங்கையில் மாற்றுத்திறனுடைய தொழிலில் உள்ளவர்களின் 15 வீதமானவர்கள் மாத்திரமே பெண்களாகும். இந்த நிலையானது, சந்தர்ப்பங்களை அணுகுவதில் உள்ள பாரிய இடைவெளியை குறிப்பதாக ஐக்கிய நாடுகள் மகளிர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேநேரம், மாற்றுத்திறனுடைய ஆண்கள் அல்லது ஏனைய பெண்களுடன் ஒப்பிடும்போது மாற்றுத்திறனுடைய பெண்கள் மேலதிக பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனறர் என்று ஐக்கிய நாடுகளின் மகளிருக்கான அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ரமயா சல்காதோ தெரிவித்துள்ளார்.