கொழும்பில் மந்திரவாதியிடம் சென்ற நபரிற்கு நடந்த கொடுமை!!

290

மந்திரவாதியிடம் சென்ற நபரிற்கு நடந்த கொடுமை

கொழும்பில் இருந்து மந்திரவாதியை தேடிச் சென்ற நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக நானுஓய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மந்திரவாதி ஒருவரினால் வழங்கப்பட்ட இளநீரை குடித்தமையினால் 64 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். கடந்த 18ஆம் திகதி உயிரிழந்த நபர் நுவரெலியா பொலிஸ் பிரிவில் வசிக்கும் தோமஸ் மூதியப்பன் என்பவர், மந்திரவாதியை சந்திந்த வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் சாரதியாக அவர் பணியாற்றுகின்றார். அவர் தனக்கு ஏற்பட்ட நோய் தொடர்பில் மந்திரவாதி ஒருவரை சந்திப்பதற்காக தனது மகளுடன் சென்றுள்ளார். குறித்த நபர் 5 இளநீர் வெட்டி முழுமையாக குடிக்குமாறு கூறியுள்ளார்.

அதற்கமைய குடிக்க ஆரம்பித்த நபர் 3வது இளநீர் குடிக்கும் போதே கழிப்பறை செல்ல வேண்டும் என கூறியுள்ளார். பின்னர் மீண்டும் அவர் அதனை குடித்த போது மயங்கி விழுந்து நுவரெலியா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாக அவரது மகள் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.