கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்துள்ள விபரீதம்!!

521

இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்துள்ள விபரீதம்

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியிலுள்ள குளத்திலிருந்து குடும்பஸ்தரொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 26 வயது மதிக்கத்தக்க தர்மபுரம் பகுதியை சேர்ந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேச மக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நபர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.