யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை : கொலையாளிக்கு வலைவீசும் பொலிஸார்!!

533

பெண்ணொருவர் கொடூரமாக கொலை

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை கொலை செய்த பிரதான சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். சில மாதங்களுக்கு மன்னர் உரும்பிராய் பகுதியில் வயதான பெண்மணி ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

மகனைத் தேடிச் சென்று தாக்குதல் நடத்தியவர்கள் மூதாட்டியை அடித்துக் கொன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவர் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரும் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். எனினும் பிரதான சந்தேக நபர்களான மூவரை பொலிஸார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சூத்திரதாரிகளான இருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதிக்குள் நடமாடுவதாக மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து விசேட சுற்றி வளைப்பின் மூலம் குறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு பிரதான சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.